<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
   <channel>
      <title>kirukkal .com</title>
      <link>http://www.kirukkal.com/</link>
      <description></description>
      <language>en</language>
      <copyright>Copyright 2008</copyright>
      <lastBuildDate>Sat, 03 May 2008 06:43:59 -0800</lastBuildDate>
      <generator>http://www.sixapart.com/movabletype/?v=3.35</generator>
      <docs>http://blogs.law.harvard.edu/tech/rss</docs> 

            <item>
         <title>ஹாப்பி பர்த்டே டியூட் !! - சுஜாதா ரங்கராஜன்</title>
         <description><![CDATA[<p><embed id="VideoPlayback" style="width:400px;height:326px" flashvars="" src="http://video.google.com/googleplayer.swf?docid=-4022128335437486396&hl=en" type="application/x-shockwave-flash"> </embed></p>

<p><a href="http://www.lazygeek.net/archives/2008/05/sujathalogy_remembering_sujatha.html">வீ மிஸ் யூ</a>.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/05/happy_birthday_dude_sujatha_rangarajan.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/05/happy_birthday_dude_sujatha_rangarajan.html</guid>
         <category>சுஜாதா</category>
         <pubDate>Sat, 03 May 2008 06:43:59 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>தசாவதாரம் - பாடல்கள்</title>
         <description><![CDATA[<p><img alt="dasavathaaram kamalhassan" src="http://www.kirukkal.com/images/dasavathaaram_kamal.jpg" width="550" height="292" /></p>

<p>மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்.</p>

<p>முகுந்தா முகுந்தாவில் மட்டும் சாதானா சர்கம் தெரிகிறார். இந்தப் பாடலில் கடைசியாக மொட்டைப் பாட்டியாக பாடும் கமலின் குரல் அவ்வளவு சிலாக்கியமில்லை. </p>

<p>கல்லை மட்டும் பார்த்தால் பாடலின் கடைசி நிமிடத்தில் ஹரிஹரன், பாடலுக்கு ஜஸ்டிஸ் செய்கிறார்.</p>

<p>இப்படி எல்லாம் தேடித் தேடி நல்ல இடங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. கமல் பாடும் <em>ஓ சனம்</em> என்னும் செண்டி பாங்கராவை கடைசி வரை கேட்க முடியவில்லை. இதற்காகவா அந்த ஹிமேஷ் ? நம்ம ஸ்ரீகாந்த் தேவா கூட விட்டு கலக்கியிருப்பார் போலிருக்கிறது. </p>

<p>கமல் படத்தில் பாடல்கள் சுமார் ரகமாயிருப்பது இது முதல் முறையல்ல. ஆகவே இது ஓகே. கேயாஸ் தியரி, வேதாந்தம் என்று படத்தை பற்றி பேசும் கமல், திரைக்கதையை சுவாரசியமாக்கியிருப்பார் என நம்பலாம்.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/dasavathaaram_songs.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/dasavathaaram_songs.html</guid>
         <category>இசை</category>
         <pubDate>Sun, 27 Apr 2008 17:21:33 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>அடுத்தது என்ன? - அசோகமித்திரன்</title>
         <description><![CDATA[<p><img alt="ashokamitran_next_book.jpg" src="http://www.kirukkal.com/images/ashokamitran_next_book.jpg" width="176" height="600" /><br>[<a href="http://www.vikatan.com/av/2008/apr/23042008/av0204.asp">ஆனந்த விகடன்</a>]</p>

<p>நாளை[ஏப்ரல் 23] <a href="http://en.wikipedia.org/wiki/World_Book_and_Copyright_Day">உலக புத்தக தினம்</a>. படிப்பதைப் பற்றி பின்பு யோசிக்கலாம், அட்லீஸ்ட் ஆளுக்கொரு புத்தகம் வாங்கலாம்.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/asookamitran_next_novel.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/asookamitran_next_novel.html</guid>
         <category>எழுத்தாளர்கள்</category>
         <pubDate>Tue, 22 Apr 2008 23:05:55 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>சுஜாதாவின் வீடு</title>
         <description><![CDATA[<p><img alt="sujatha's house" src="http://www.kirukkal.com/images/sujatha%27s%20house%201.jpg" width="335" height="198" /></p>

<blockquote>இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.</blockquote>

<p>குமுதத்தில் ரஞ்சன் எழுதிய <a href="http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-23/pg5.php">சுஜாதாவின் வீடு</a> என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது.</p>

<p>வலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாம் இது. உண்ணாவிரதம் நடத்தாத குறை. </p>

<p> அவர் சொன்னதைப் போல இதற்காகவே காத்திருந்தது போலத் தான், எல்லாமே அவசர அவசரமாய் நடந்து விட்டன. உண்மையாகவே பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் எல்லோரும் சுஜாதாவின் மறைவிற்கு பின் அஞ்சலியை பதிவு செய்து விட்டார்கள். </p>

<p>அவர் இருக்கும் வரையில், கண்டுகொள்ளாமல் இருந்த எழுத்தாளர்கள், உப-எழுத்தாளர்கள், சக-எழுத்தாளர்கள், டு-பி-எழுத்தாளர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்திய இடம் இணையம் தான். பல so-called எழுத்தாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போகும் போது, புக்ஸ்டோரில் நிறுத்தி அவரின் இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கி கொண்டு , வீட்டிற்கு செல்வதற்குள் படித்து முடித்து எழுதிய அஞ்சலி போல, பல அஞ்சலி கட்டுரைகள் ஏகமாய் superfluous. சிலவற்றில் வாரிசு சண்டை தொனியும் தென்பட்டது.</p>

<p>சுஜாதாவைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர் ரஞ்சனின் குமுதத்தில் எழுதிய இந்த கட்டுரை, அவர் மறைவின் ஆற்றாமை தாங்காமல் வந்து விழுந்த, உண்மையான ஒரு வாசகனின்/நண்பனின் வரிகளாகவே எனக்கு தோன்றுகின்றன. </p>

<p>இதையெல்லாம் எதிர்த்து தர்ணா ஊர்வலம் கூட்டுபவர்களுக்கு, சுஜாதாவின் பதவிக்காக புத்தகத்தை பரிசளிக்கலாம். <a href="http://www.kirukkal.com/archives/2008/04/hogenakkal_issue.html">முன்னமே</a> சொன்ன மாதிரி, சுஜாதாவின் வரிகளை மீண்டும் மீண்டும் நெட்ரூ பண்ணலாம். இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர. எங்க...திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்...</p>

<p><u>பி.கு</u> - இணையத்தில் எழுதுபவர்கள் மனநோயாளிகள் என்று அரசு பதில்களில் எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ?  என்று அன்பர் ஒருவர் எழுதியிருந்தார். அரசு பதில்களை எல்லாம் ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.  ஒரு glorified கிசுகிசு பத்தி தான் அது.</p>

<p>குமுதத்திற்கு வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மறைவைப் பற்றி எழுதும் போது, இந்த சண்டையெல்லாம் இழுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.மேலும் கர்சீப் போட்டு இடத்தைப் படித்த கமெண்ட் என்னவோ established எழுத்தாளர்களை நோக்கியே இருந்ததாகவும் தோன்றுகிறது.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/kumudam_ranjan_sujathas_house.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/kumudam_ranjan_sujathas_house.html</guid>
         <category>சுஜாதா</category>
         <pubDate>Mon, 21 Apr 2008 21:47:42 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>பலான பலான</title>
         <description><![CDATA[<p>இப்படி எங்காவது 'பலான' என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர். </p>

<p>இந்த 'பலான' என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல பலான தமிழ் சொல்களில் ஒன்று. இப்பொழுதெல்லாம் குஜிலிப்பான்ஸ், ஜலபுலஜல்ஸ் என்று மாற்று சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கொக்கோகம், மதன, காம என்று எதை சொன்னாலும் இக்காலத்து டினேஜர்களுக்கு புரியாமல் போகலாம். 'பலான' என்பது அப்படியல்ல. </p>

<p>ஒரு பன்னிரெண்டு (இப்பொழுதெல்லாம் பத்து) வயதில் அறிமுகமாகும் இந்த பலான என்ற வார்த்தையை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வழக்கமாய் ஞாபகம் இருப்பதில்லை. தினமலர் வாரமலரின் துணுக்கு மூட்டையோ, வண்ணத்திரையின் நடுப்பக்க பின்-அப் பகுதியோ, கெட்ட வார்த்தை புத்தகம் படிக்கும் நண்பனோ, யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியவுடன் ஏற்படுத்தும் கிளுகிளுப்பு அடங்க ஹார்மோன்கள் விடுவதில்லை. </p>

<p>பலான என்பது பலவகையான என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அதை கெட்ட சமாசாரத்திற்கு எற்றபடி பலான என்று சுருக்கியவர் சாமர்த்தியர். பலவகையான காரியங்களுக்கு தனித்தனியாக சொற்கள் இருந்தாலும், மிட்நைட் மசாலாவிலிருந்து டிரிபில் எக்ஸ் படம் வரை எல்லாவற்றிற்கும் one word fits all, பலான. ஜீனியஸ்.</p>

<p>கூகிளில் <a href="http://www.google.com/search?sourceid=navclient&ie=UTF-8&rls=GGLJ,GGLJ:2006-05,GGLJ:en&q=%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9">பலான</a> என்ற வார்த்தையை தேடிப் பார்த்தால், கிட்டத்தட்ட 6,250 வலைதளங்கள் கிடைக்கின்றன. பலான படம், பலான இடம், பலான பலவீனம், பலான விஷயம், பலான உபயோகம், பலான பெயர், பலான புத்தகம், பலான யோசனை, பலான விடுதி, பலான இணையம், பலான சுவை, பலான குடும்பம், பலான வசதி, பலான காட்சி, பலான ஆயிட்டம், பலான வூடு, பலான எண்ணம் என்று அப்படி இப்படி போய் கடைசியாக பலான எஸ்.எம்.எஸ், பலான பதிவு வரை வந்தாயிற்று. </p>

<p>இவற்றிற்கு காரணம் எழுத்து தமிழை, பேச்சு தமிழை விட கொஞ்சம் தூய்மையானதாகவே வைத்திருந்தார்கள்/ருக்கிறார்கள். ஆங்கில இலக்கியத்திலும் படங்களிலும் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு தமிழில் மிக மிக தெளிவான கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்து தமிழில் பயன்படுத்தும் போது கொஞ்சம் வன்முறையாக தெரிவதால் தான் இந்த substitution. யோசித்துப் பார்த்தால் பேச்சுத் தமிழை விட எழுத்துத் தமிழில் தான் பலான என்கிற வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருக்கிறது. வீட்டில் பலான விஷயம் என்று உபயோகித்தால் பின்னி எடுத்து விடுவார்கள். ஆனாலும் சிலர் 'க்'கன்னாவை வைத்து பேசுவதைப் போல், பலான இடத்துல பலான டிபன் சாப்டுட்டு பலான பஸ் புடிச்சு பலான டைமுக்கு வந்துற்றேன் என்று பேசுவதே பலான வார்த்தையில் தான்.</p>

<p>சமீபத்தில் வெளியான தரணி-விஜய்யின் குருவி பட இசையில், பலானது பலானது என்கிற ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. வித்யாசாகர் இசையில் அவரும் ராஜலட்சுமியும் பாடியிருக்கிற இந்தப் பாடல் தான் கேட்டவுடன் பிடித்தது. எதோவொரு DJ பாங்கராவுடன் சேர்த்த தமிழ்ப் பாட்டு போல இருந்தாலும், டாக்டர் விஜய்யும் த்ரிஷாவும் வழக்கமான சுறுசுறுப்பாட்டத்தை போட்டு ஹிட்டாக்குவார்கள் என்று நம்பலாம்.</p>

<p>அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பிராணி<br />
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ</p>

<p>மெகா சைஸுல மெகா சைஸுல பிலிம் காட்டுற நீ<br />
மலைக்கள்ளனா மலைக்கள்ளனா எதைத் தேடுற நீ</p>

<p>என்றெல்லாம் சுவையாய்(?!) சரணம் இருந்தாலும் பாடலின் பல்லவியில் பலான வரிகளிகளும் தேவையில்லமல் வரும் சில வார்த்தைகளும், இப்போதுள்ள சூழ்நிலையில் காண்டர்வர்சியை அழைக்கின்றன. அது என்ன என்று காம்படீஷன் போஸ்கார்டில் அல்லாமல் ஈமெயில் அனுப்பினால் VPPயில் பலான புத்தகங்கள் அனுப்பப்படும்.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/dharani_vijay_vidhyasagar_kuruvi_music.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/dharani_vijay_vidhyasagar_kuruvi_music.html</guid>
         <category>இலக்கியம்</category>
         <pubDate>Thu, 17 Apr 2008 06:34:46 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>ஒக்கே-நக்கல்</title>
         <description><![CDATA[<p><img alt="kollywood sunglass team" src="http://www.kirukkal.com/images/sunglass_team.jpg" width="550" height="198" /></p>

<p>போன வாரம், ஒகேனக்கல் விஷயத்திற்காக கோடம்பாக்கத்து சன்கிளாஸ் படை மேடையில் கை கோர்த்ததை கண் குளிர பார்த்தோம். அப்போது பேசிய சிலரின் உண்மையான வொக்காபுலிரியும் புல்லரித்தது. குறிவைத்து ரஜினியின் பேச்சுக்கு வந்த மிகையான கர்நாடக எதிர்ப்பும், அதற்கு கொஞ்சம் கோபமான தொனியில் வந்து விழுந்த ரஜினியின் பதிலும், தமிழர்களை சில நிமிடங்கள் சிந்தனையிலும், அதைவிட முக்கியமாக சுவாரசியத்திலும் ஆழ்தின.</p>

<p>ரஜினி சற்றே கோபமாய் பதிலளிப்பது இது முதல் முறையன்று. ஆனால் நிஜமாகவே இந்த பதில் அவரின் கோபத்தின் வெளிப்பாடா அல்லது ச்சும்மா உல்லுலாக்காட்டிக்கு கோபமா என்று யோசித்துப் பார்க்கலாம். இமயமலை செல்வது, தியானம் செய்வது எல்லாம் இருந்தாலும், 25 வருடமாக இந்த சினிமா என்னும் ஒரு மாயச் சுழற்சியில் இருப்பவர். இதைப் போன்று ஏராளமான துக்கடா மேட்டர்களை சந்தித்தவர், முதிர்ச்சியுடன் தான் இருக்க முடியும். இதற்கெல்லாம் அத்தனை சீக்கிரமாக கோபப்பட்டு விடுவார் என்று தோன்றவில்லை. அவருடைய பதிலில் நிதானம் தெரியவில்லை என்றாலும், இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்ப்பிற்கு, இதைத் தவிர வேற வழியிருப்பதாய் தோன்றவில்லை. தன்னை சுற்றி பின்னப்படும் இந்த பிதற்றல் அரசியல் தேவையா என்று கூட ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால், it comes with the job. கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றினாலும், தென்னிந்தியாவில் மட்டுமே பெருமளவு, இவைச் சாத்தியம். </p>

<p>கமலஹாசனும் இந்த மாதிரியே மேடை நாகரீகம் கருதி சில விஷயங்களுக்கு ச்சும்மா கோபப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு <a href="http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g">உண்மையாகவும் கோபப்பட்டார்</a>. ஆனால் அது அவருடைய வேலையை செய்யவிடாமல் தடுத்தற்காக. சண்டியர் என்று பெயர் வைத்திருந்த படத்தை எடுக்க விடாமல், தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் ஆதாயம் தேடிப் பேசிய அரசியல்வாதிகளைப் பற்றிய கோபம். <a href="http://www.youtube.com/watch?v=C5uHxcSga5U">உண்மையானது</a>.</p>

<p>காலையில் எழுந்து வேர்க்க விறுவிறுக்க வேலைக்குச் சென்று வந்து, அப்பாடா என்று மெகா சீரியல் பார்க்கும் மெஜாரிட்டி தமிழர்களுக்கு, இந்த ஒகேனக்கல் சண்டை பல விஷயங்களில் ஒன்று. மற்றபடி சிம்பு பக்கத்தில் உட்கார்ந்த நயன்தாரா ஏன் பேசவில்லை, திரிஷாவின் ஒரிஜினல் கலர் இவ்வளவுதானா, சத்யராஜ் மயிறு என்றாறா மசிறு என்றாறா, அஜித்தின் கண்ணாடி ரேபானா வாரிலக்ஸ்ஸா என்பது போன்ற philistinistic கேள்விகள் தான். ஆக நம்மில் பலர் இந்த ஒகேனக்கல் விஷயத்திற்காக ஒரு நிமிடம் வருத்தப்பட்டாலும், முக்கியமாய் நம்மை ஆக்கிரமிப்பது இந்த ஹெட்லைன் நியூஸும் அதனைப் பின்தொடரும் இவ்வகை விசித்திர துணுக்குகளும் தான். </p>

<p>ஒரு பத்து வருடங்களுக்கு பின் யோசித்துப் பார்த்தால் இதிலுள்ள அபத்தம் தெரியும். சுஜாதா சொன்னது போல், இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/hogenakkal_issue.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/hogenakkal_issue.html</guid>
         <category>தமிழ்நாடு</category>
         <pubDate>Wed, 16 Apr 2008 07:21:33 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>அரை(குறை)வரி விமர்சனங்கள்</title>
         <description><![CDATA[<p><img alt="death_at_a_funeral.jpg" src="http://www.kirukkal.com/images/death_at_a_funeral.jpg" width="479" height="209" /></p>

<p><a href="http://www.deathatafuneral-themovie.com/">சாவுக்கு 'கிராக்கி'</a> - இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல்.</p>

<p><a href="http://en.wikipedia.org/wiki/Pidichirukku">பிடிச்சிருக்கு</a> - யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர். சாதாரணமான க்ளாசிக் லவ் ஸ்டோரி. ஆனாலும் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்ததால் பிடித்திருந்தது. பாடல்களின் படப்பதிவில் பின்னி எடுக்கிறார் டைரக்டர் கனகு. சபாஷ்.</p>

<p><a href="http://www.imdb.com/title/tt0480242/">நிஜவாழ்க்கையில் டான்</a> - ஸ்டீவ் கேரால் நடித்திருப்பதால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாற்றிய சராசரி ஹாலிவுட் படம்.</p>

<p><a href="http://www.imdb.com/title/tt0454084/">கண்முடித்தனமான காதல்</a> - எதோ இந்திய நடிகை இருந்ததாலும், ட்ரைலர் சுவாரசியமாய் இருந்ததாலும், படம் பார்த்து ஒன்றரை மணி நேரம் வீண். ஹாலிவுட் படத்திலும் மகள்கள் காதலித்தால், இந்தியத் தகப்பன்கள் பல்லைக் கடிக்கிறார்கள்.</p>

<p>இவைத் தவிர இன்னும் இரண்டு மூன்று படங்கள் பார்த்து மறந்து போய் விட்டது. கொஞ்சம் நாட்களுக்கு சினிமா பார்க்கப் போவதில்லை. இனிமேல் தசாவதாரத்திற்கும், இண்டியானா ஜோன்ஸிற்கும் தான் கைக்காசை செலவழிக்கப் போவதாய் முடிவு. </p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/lowbrow_reviews.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/lowbrow_reviews.html</guid>
         <category>பயாஸ்கோப்</category>
         <pubDate>Wed, 02 Apr 2008 08:15:12 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்</title>
         <description><![CDATA[<p><img alt="javier bardem" src="http://www.kirukkal.com/images/javier_bardem.jpg" width="500" height="217" /></p>

<p>இந்த வருட ஆஸ்கர்களை கவர்ந்து சென்ற கோயன் சகோதரர்களின், மனிதனின் ஆதார குணங்களை பற்றிய அட்டகாசமான படம். ஆர்ட்-ஹவுஸ் படம் போல இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய திரைக்கதை, இசையில்லாமல் இழுத்துச் செல்லப்படும் காட்சியமைப்பு, சொல்லாமல் சொல்லப்படும் சின்னச் சின்ன விஷயங்கள் என்று பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம்.</p>

<p>கண்ணில் எதிர்ப்படும் வயதானவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே வித்தியாசமாக சுட்டுச் சாகடிக்கும் சைக்கோவான ஒரு வில்லன். குற்றம் செய்த இடத்துக்கே மீண்டும் செல்ல எத்தனிக்கும் மற்றோரு பாத்திரம். போலிஸ் வேலையை விட்டுவிட்டு மனைவிக்கு துணி துவைத்துப் போட எத்தனிக்கும் ஒரு நேர்மையான் போலிஸ் என பலவகைப்பட்ட மனிதர்கள்.</p>

<p>சைக்கோ வில்லன்களில் ஹாவியே பார்டெம்முக்கு முதலிடம். பார்டெம் குடித்துவிட்டுப் போன பால் பாட்டிலை டாமி லி ஜோன்ஸ் எடுத்து பார்க்கும் காட்சியும், அவர்கள் இருவரும் ஒரே இருட்டு அறையில் இருக்கும் காட்சியும் கச்சித ஹைக்கூ. படம் முழுவதும் புரிய சப்-டைட்டில் அவசியமோ அவசியம்.</p>

<p>படம் பிடித்திருந்தால், கோயன் சகோதரர்களின் ரொம்பவும் அறியப்படாத பழைய படமான Blood Simpleலை பார்க்கலாம். </p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/no_country_for_old_men.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/no_country_for_old_men.html</guid>
         <category>பயாஸ்கோப்</category>
         <pubDate>Wed, 02 Apr 2008 07:10:41 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>3 X 9  = டிஸ்லெக்ஸியா</title>
         <description><![CDATA[<p><img alt="taare_zameen_par.jpg" src="http://www.kirukkal.com/images/taare_zameen_par.jpg" width="486" height="223" /></p>

<p>அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் <em>தாரே சமீன் பர்</em> கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி. </p>

<p>புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ.</p>

<p>இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய மசாலாவாக இல்லாமல் ஹாலிவுட் படம் போல் நகரும் படத்தில் நிஜ கோமாளியாய் புகுந்து குழப்பியடிக்கிறார். சிறந்த நடிப்பிக் அவர் மிளிர்ந்தார் என்று விமர்சகர்கள் சொல்வதெல்லாம் சுத்த புருடா. ஏதோ சாதாரணமான படத்தை காப்பாற்ற வந்த பரமாத்மா போல தன்னை நினைத்துக் கொண்டு, இரண்டாம் பாதியில் எல்லா சீன்களிலும் இழுத்துப் போட்டுக் கொண்டு மூஞ்சியை காட்டுகிறார். </p>

<p>தனது இயக்கதில் வரும் படம், தோற்று விடாமல் இருக்க, தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கப் போய், மெல்லிய சிம்பொனி போல இருந்த படம், சிவாஜியின் திரிசூலம் போல அக்மார்க் மசாலாவாகிறது. அந்த ஆர்ட் டீச்சரின் பாத்திரத்தை அடக்கி வாசிக்கும் நடிகர்களை வைத்து செய்திருந்தால், படம் சிம்பொனியாகவே முடிந்திருக்கலாம். </p>

<p>இரண்டாம் பாதி சுவாரசியமில்லை. தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் கல்யாணத்திற்கு பிறகு பூவடைத்த அறையில், ஹீரோ ஹீரோயினை கட்டிப்பிடித்தவுடன் வரும் சுபம் போல ஒரு ரொம்பவும் எதிர்ப்பார்த்த உப்புமா முடிவு. என்ன தான் டாகுமெண்டிரி படமாயிருந்தாலும் ரொம்பவும் பாடமெடுக்காமல் இருப்பது அவசியம். </p>

<p>முதல் பாதியில் பல அமைதியான துல்லியமான காட்சிகளுக்காகவும், அந்த சிறுவன் 3 X 9 கணக்கு போடும் கனவுக் காட்சியில் வழிந்தோடும் கிரியேடிவிட்டிக்காகவும் அமீரை மன்னிக்கலாம்.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/04/taare_zameen_par_aamirkhan.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/04/taare_zameen_par_aamirkhan.html</guid>
         <category>பயாஸ்கோப்</category>
         <pubDate>Tue, 01 Apr 2008 08:17:40 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்</title>
         <description><![CDATA[<p><img alt="journal of joyce carol oates" src="http://www.kirukkal.com/images/journal_joyce_carol_oates.jpg" width="375" height="199" /></p>

<p>நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO)  என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.</p>

<p>ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த <a href="http://www.amazon.com/High-Lonesome-Joyce-Carol-Oates/dp/0060501197">High Lonesome</a> என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.</p>

<p>1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம்.  1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே. </p>

<p>இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம். </p>

<p>இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது. </p>

<p>தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.</p>

<p>பா.ராகவன் <a href="http://www.writerpara.net">பேப்பர்</a> எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் <a href="http://www.writerpara.net/?p=7">எடையை குறைத்த</a> விஷயத்தையும், <a href="http://www.writerpara.net/?p=28">தூர்தர்ஷன் நினைவுகளையும்</a> எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.</p>

<p><a href="http://www.jeyamohan.in">ஜெயமோகன்</a> படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.  </p>

<p>அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத <a href="http://www.sramakrishnan.com/">ஒரு வித வலைப்பதிவு</a> ஆரம்பித்திருக்கிறார். </p>

<p>இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் - The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can't be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice "prints," our journal-selves are distinctly our own; try as we might, we can't elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/03/writers_journal.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/03/writers_journal.html</guid>
         <category>எழுத்தாளர்கள்</category>
         <pubDate>Wed, 19 Mar 2008 06:37:14 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>ஏ டண்டணக்கா !!</title>
         <description><![CDATA[<p><embed src= "http://odeo.com/flash/audio_player_tiny_black.swf" quality="high" width="145" height="25" allowScriptAccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars= "valid_sample_rate=true&external_url=http://www.arthika.net/1234TB/new/Kaalai/TamilBeat.Com%20-%20Kutti%20Pisasae.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"> </embed></p>

<p>சமீபத்திய பாடல்களில் சிறந்த குத்துப் பாடல், காளை படத்தின், குட்டிப் பிசாசே தான். சிம்பு அவரின் தந்தையாரின் குரல் வளத்துடன், சரியான ஸ்ருதியுடன் பாடும் டண்டணக்காவும், ரேடியோ மிர்ச்சி சுசித்ரா வசீகரமான  குரலுடன் பாடும் டணுக்குணக்காவும் தான்  இப்போது என்னைப் போல் பலரை <a href="http://www.kirukkal.com/archives/2007/03/treadmill_songs.html">ஓட வைக்கும் பாடல்</a>.</p>

<p>ரொம்பவே ரொமாண்டிக்கான இந்த கும்மாங்குத்துப் பாடலை இசையமைத்த ஜி.வி பிரகாஷுக்கு காசு மழை கொட்டக் கடவுக !!</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/03/kutti_pissase_simbhu_suchithra.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/03/kutti_pissase_simbhu_suchithra.html</guid>
         <category>எம்பாட்டு</category>
         <pubDate>Thu, 13 Mar 2008 06:50:11 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>குழந்தைகள், பெண்கள், ஆண்கள்</title>
         <description><![CDATA[<p><a href="http://www.flickr.com/photos/lazygeek/2307020098/" title="victoria's by lazygeek, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2142/2307020098_15083ac4e7.jpg" width="500" height="231" alt="victoria's" border="0"/></a><br />
</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/03/scenes_from_a_mall.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/03/scenes_from_a_mall.html</guid>
         <category>சியாட்டல்</category>
         <pubDate>Thu, 13 Mar 2008 06:42:11 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>அப்போலோ தினங்கள் - சுஜாதா</title>
         <description><![CDATA[<p><img alt="apollo_dhinangal_sujatha.jpg" src="http://www.kirukkal.com/images/apollo_dhinangal_sujatha.jpg" width="370" height="170" /></p>

<p>எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட - தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், <em>உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்...</em> - அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் <a href="http://www.vikatan.com/av/2008/mar/12032008/av0202.asp">சுஜாதா எழுதிய கடைசிப் பக்கம்</a>, இந்த வார ஆனந்த விகடனில்.</p>

<p><br />
<blockquote><img alt="apollo_dhinangal_sujatha_b.jpg" src="http://www.kirukkal.com/images/apollo_dhinangal_sujatha_b.jpg" width="205" height="441" /><br>[நன்றி - <a href="http://www.vikatan.com">விகடன்</a>]</blockquote></p>

<p>இதைத் தவிர தேசிகன் எழுதியிருக்கும், சுஜாதாவைப் பற்றி் பலருக்குத் தெரியாத மற்றொரு பக்கம்.</p>

<blockquote>சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

<p>பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.</p>

<p>சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.</blockquote></p>

<p>ஒரு பக்கம், சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள உணர்ச்சிகள் அவரைத் தாண்டி சென்றதில்லை என்னும் விமர்சனங்கள், மற்றொரு பக்கம் இந்தக் கட்டுரை. தேசிகனிடம் போன வாரம் பேசிய போது, “ ஒரு கையே போனா மாதிரி இருக்கு” என்று அவர் சொன்னது, இப்போது தெளிவாக புரிகிறது. சுஜாதாவின் உயிர் பிரியும் நொடியில் அவரின் அருகில் உட்கார்ந்து ஆண்டாள் பாசுரமான, சிற்றஞ் சிறுகாலே படித்ததாய் சொல்கிறார். </p>

<p><em>சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்<br />
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் <br />
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ <br />
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.<br />
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! <br />
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு<br />
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்<br />
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!</em></p>

<p>திருப்பாவையில் ரொம்பவே விசேஷமானது இந்த 29வது பாசுரம். இதன் கடைசி மூன்று வரிகளில் தான் திருப்பாவையின் மொத்த சாராம்சமும் ஒளிந்துள்ளது. </p>

<p>தேசிகனின் இந்த கட்டுரையைத் தவிர, நா முத்துக்குமார், தன்னை சுஜாதா கண்டெடுத்த விதத்தை விளக்கும் ஒரு குறிப்பும், சுஜாதாவைப் பற்றி அவரது மனைவி சுஜாதாவின் பேட்டியும் வந்துள்ளது.</p>

<blockquote>எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.

<p>இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..? </blockquote></p>

<p>We miss you !!</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/03/apollo_dhinangal_writer_sujatha.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/03/apollo_dhinangal_writer_sujatha.html</guid>
         <category>சுஜாதா</category>
         <pubDate>Thu, 06 Mar 2008 21:15:47 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>மாதா, பிதா, சுஜாதா</title>
         <description><![CDATA[<p>கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன...எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது. </p>

<p>கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர் எழுத எழுத புரிந்து கொண்டதை, விட்டு விட முடியும் என்று தோன்றவில்லை. அதனால்,</p>

<p>விண் நாயகன் என்றொரு மாதமிருமுறை இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரை ஒன்றை படிப்பதற்காகவே வாங்கி, அசோக் நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள கடையில் உட்கார்ந்து படித்து விட்டு, தூக்கிப் போட்டு விடுவேன். அந்த கட்டுரை முடியும் தருவாயில், ஒரு ஸ்திரமான பதிலைச் சொல்லாமல் முடித்தார். ரொம்ப நாட்களாய் விடைத் தேடுகிறேன். </p>

<p>இப்பொழுதாவது சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து - "சுஜாதா, கடவுள் இருக்கிறாரா ?"</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/02/matha_pitha_sujatha.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/02/matha_pitha_sujatha.html</guid>
         <category>சுஜாதா</category>
         <pubDate>Thu, 28 Feb 2008 18:27:36 -0800</pubDate>
      </item>
            <item>
         <title>எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் மறைவு</title>
         <description><![CDATA[<p>இங்கு தான் அனைத்துமே<br />
போவதென்ப தெவ்விடம்<br />
உமது நல்ல சீடருள்<br />
அவர்கள் புனையும் கதைகளுள்<br />
பல்கி வாழ வாழ்த்துவேன்<br />
அந்தம் அறு ரங்கராஜனை !!</p>

<p><a href="http://www.sujathalogy.com">சுஜாதாலஜி</a>யில் - எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி.</p>]]></description>
         <link>http://www.kirukkal.com/archives/2008/02/writer_sujatha_passes_away.html</link>
         <guid>http://www.kirukkal.com/archives/2008/02/writer_sujatha_passes_away.html</guid>
         <category>சுஜாதா</category>
         <pubDate>Wed, 27 Feb 2008 09:52:35 -0800</pubDate>
      </item>
      
   </channel>
</rss>
