‘பதிவுகள்’ பதிவுகள்

February 27th, 2009

He gets it !!

writer sujatha

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.

எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.

கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.

சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.

ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!


ஆக ஒரு வழியாக மூவபிள் டைப்பிலிருந்து(MT) வேர்ட்ப்ரஸ்ஸுக்கு(WP) கிறுக்கலையும், அந்தப் பக்கத்தையும் ஜாகை மாற்றியாகிவிட்டது. கிறுக்கலுக்கு இது முதல் மாற்றம். அந்தப் பக்கத்திற்கு இது மூன்றாவது.

நான்கு வருடங்களாக பயன்படுத்திய மென்பொருளை அப்படியே தூக்கிப் போட முடியவில்லை. அதாவது, மூவபிள் டைப்பில் நான் நாளொரு மேனியாக கட்டிய டெம்பிளேடுகைள விட்டுவிட முடியாமல், அதற்காக மெனக்கெட்டு(மெனகட்டு ?) அதே look and feelலோடு வேர்ட்பிரஸ்ஸிலும் கட்ட கொஞ்ச நாளாகிவிட்டது.

மூவபிள் டைப்பில் வலைப்பதிவு செய்வது நன்றாகவே இருந்த போதிலும், சமீபத்திய வெளியிடான MT 4.0 இருந்த பிரச்சனைகளால், பல பதிவுகள் எழுதும் போதே காணாமல் போய் விட்டன. கிறுக்கலில் எழுதி வைத்திருந்த சில பதிவுகள் பூச்சி பூச்சியாக மாறின. அதனால் எழுதுவதை கிடப்பில் போட்டு விட்டு, ஒரு ரெண்டு வாரம் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேர்ட்பிரஸ் டெவலப்பராகி விட்டேன். இனி எல்லாம் சுகமே !!

~

2002ன் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த போது இதைப் போல வலைப்பதிவு மென்பொருள்கள் உபயோகத்தில் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் எழுத ஆள் இல்லை.

இணையத்திலேயே எழுதி அப்படியே பட்டனைத் தட்டி(one-button publishing) பதிவு செய்யலாம் என்கிற விஷயம் தான் ப்ளாகரில் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அதற்காகவே மட்டும் தான் எழுத தொடங்கினேன். முதலில் வைத்திருந்தது ரொம்பவும் காடியான கலர்கள் கொண்ட, ரொம்பவே கிரேஸியான டெம்பிளேட். அது பிடிக்காமல் முதல் மூன்று மாதத்தில் மாற்றி விட்டேன். அதற்குப் பிறகு வந்தது தான் இந்த டிஸைன். இது 2005ல் கொஞ்சம் தளுக்காக மாற்றப்பட்டது. பின்பு போன வருடம் வரை இது நிலைத்துப் போனது.

2006ல் கிறுக்கல் எழுதலாம் என்று ஆரம்பித்த போது, ஒரு எளிமையான டிஸைன் தேவலாம் என்று தோன்றியது. மூவபிள் டைப்பில் இருந்த minimalist என்ற டிஸைன் ரொம்பவும் பிடித்துப் போக, அதை எடுத்து இன்னமும் எளிமைப்படுத்தி உருவானது தான் இந்த டிஸைன். நண்பர்கள் சிலருக்கு பிடிக்காமல் போனாலும், இதை வைத்துக் கொண்டிருக்க காரணம், எளிமை.

தேவைக்கு அதிகமான சைட்பார் விஷயங்களுடன், தேவைக்கு மிக அதிகமான விளம்பரங்களுடன் இருக்கும் சில் வலைப்பதிவுகளில் எது பதிவு எது மற்றது என்று தெரியாமல் போய்விட்ட காலத்தில், ஒரு ideal blog எப்படி இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கோபத்தோடு நினைத்து கட்டியது தான் இந்த கிறுக்கல் டிஸைன்.

மேலும் தற்போது வலைப்பதிவுகளை படிப்பவர்கள், RSS செய்தியோடை மூலமாகத் தான் படிக்கிறார்கள். படிப்பவர்கள் இனி அந்தந்த தளங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. Content is the king. ஆக டிஸைன் எப்படி இருந்தால் என்ன.

~

இந்த தளத்திற்கு இது மூன்றாவது வருடம். போன இரண்டு வருடங்களில் ஒன்றும் பெரியதாக எழுதி கிழித்து விடாததால், இந்த வருடம் இந்தப் பக்கத்தில் எழுதினாலே போதும் என்பது தான் எண்ணம்.



journal of joyce carol oates

நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.

ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.

1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம். 1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே.

இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம்.

இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது.

தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பா.ராகவன் பேப்பர் எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த விஷயத்தையும், தூர்தர்ஷன் நினைவுகளையும் எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.

ஜெயமோகன் படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.

அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத ஒரு வித வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் – The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can’t be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice “prints,” our journal-selves are distinctly our own; try as we might, we can’t elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.


October 10th, 2007

பொய் / உண்மை

வெகு நாட்களுக்கு பிறகு இரு நேர்த்தியான ஆங்கில பதிவுகள் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து படிக்கும் வெகு சில வலைப்பதிவுகளில், இவையும் அடக்கம். இந்தப் குறிப்பிட்ட பதிவுகளை படித்து, ரசித்து, சிரித்து, யோசிக்க நேரம் தேவைப்படலாம். எனக்குப் பட்டது.

முதல் பதிவை எழுதியவர் ஹூக் மாக்லியோட்(Hugh Macleod). ஒரு கார்டூனிஸ்ட். விசிட்டிங்கார்ட்களின் பின் கார்டூன் வரைவது இவரது தொழில். மிக நேரடியாக முகத்தில் அடிக்கும் படி உண்மையை ஒரே ஒரு கார்ட்டூனில் சொல்வார். மைக்ரோசாப்டைப் பற்றி வரைந்த ஒரு தாக்குதல் கார்ட்டூனை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

பொய் சொல்லுதல் பற்றி, 2004ல் எழுதியிருந்த ஒரு போஸ்டை, திரும்பவும் கொண்டுவந்திருந்தார். என்னவோ செய்தது.

இரண்டாவது பதிவை எழுதியது, Freakonomics என்னும் புத்தகத்தை எழுதிய இருவரில் ஒருவர் – ஸ்டீவ் லெவிட்(Steve Levitt). சமீபத்தில் வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகனாமிக்ஸ் புத்தகம். புத்தகத்தில் சொன்னது அத்தனையும் காம்ன்சென்ஸ் தான். ஆனால் இந்த வேக உலகில், காமன்சென்ஸ் இஸ் நாட் காமன். அதனால் தான் க்ரைம் சதவிகிதத்துக்கும், ஆபார்ஷனுக்கும், முடிச்சுபோட இவர்களால் மட்டுமே முடிந்தது. கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம்.

உண்மை சொல்லுதல் பற்றி இவர் எழுதிய பதிவு. க்ரைக்ஸ்லிஸ்ட்(craigslist.org) என்னும் ஒரு free-ads வலைதளத்தில் வந்திருந்த ஒரு பெண்மணியின் பணக்கார ஆண்களை பற்றிய ரொம்பவும் ”உண்மையான’ ஒரு கேள்வியும், அதற்கு ரொம்பவும் ”உண்மையான’ பதில் சொன்ன ஒரு பணக்கார ஆண் எகனாமிஸ்டை பற்றியது. யோசிக்க வைத்தது.


ப்ளாக் ப்ளாக் என்று காமெடியாய் ஏதோ ஆரம்பித்து இன்று கொலை மிரட்டலில் வந்து நிற்கிறது. கேதி சியரா(Kathy Sierra) என்னும் ஒரு பிரபல ப்ளாகர் ஒருவரரின் வலைப்பதிவிற்கு வந்த ஏராளமான, பெயரில்லாத மிரட்டல் கமெண்டுகளால், அவர் பேசவேண்டிய ஒரு கான்பெரன்ஸிலிருந்து விலகிக் கொண்டார். கேதி ப்ளாக் தவிர சில ஜாவா சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். இவர் வலைப்பதிவு எழுதுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்க போய், பூதம் கிளம்புகிறது.

இவரின் Creating Passionate Users என்னும் பிரபல வலைப்பதிவில் இது சம்பந்தமான இந்த ப்ளாக் போஸ்டைக் கண்டு வலைப்பதிவுலகம் சற்றே சலசலத்துப் போயிருக்கிறது. பிரபல வலைப்பதிவாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் விடுமுறையில் போய்விட்டார்கள். இதனால் நிறைய வளர்ச்சியடையாத வலைப்பதிவு சட்டங்கள், உடனடி இயக்கத்துக்கு வந்தால், முன்னேற்றம் தான். பிபிசி செய்தி.

இந்திய வலைப்பதிவுலகிலும், இது போல நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு வலைப்பதிவாளர், இது போல சில கமெண்டுகளாலும் அவர் பெயரில் யாரோ எழுதிய மற்றொரு வலைப்பதிவாலும், தன் ப்ளாகை மூடி ஜூட் ஆகியது சோகம் தான். அது யாருக்கும் தெரியாதது மற்றோர் சங்கடம்.

வலைப்பதிவின் மூலம் இது போல, “மவனே நான் யார் தெரியுமா, என்னோட ஹிட் எவ்ளோ தெரியுமா ?” சங்கதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ கிடக்கிறா பிட்ச், அந்த போஸ்ட் எழுதின அவள அப்படியே ரேப் பண்ணணும் என்றெல்லாம் கேட்க ஆளின்றி எழுதுகிறார்கள். கேட்டால் freedom to talk, first amendment என்று ஜல்லி.

தன்னுடைய வலைப்பதிவில் கவிதை, கதை, நாடகம், ஊடகம் என்று நல்லவர்களாய் எழுதி, பெயரில்லாமல் மற்றவர் வலைப்பதிவில் யார் எப்படி உச்சா போகிறார்கள், எந்த பிரபல ப்ளாகர் எந்த ஆண் குறியை குறி வைக்கிறார் என்றும் சதா வாந்தி எடுக்கிறார்கள். இதைப் போல் எழுத ‘தில்’ இல்லாதவர்கள் இவர்களுக்கு ஜால்ராயிட்டு உசுப்புவது மற்றோரு விஷயம். ஒருவர் எழுதிய எழுத்தை எதிர்க்கப் போய், நிறையவே பர்சனலாகி, விஷயம் சீரியஸாகிவிட்டது.

இவர்களையெல்லாம் வருகிற மே மாதத்தில் எந்த பேட்டையிலாவது இரண்டு குடம் தண்ணீருக்கு அலைய விடலாம் அல்லது 725ஆம் நாளன்று, சாந்தி தியேட்டரில் சந்திரமுகி பார்க்க வைக்கலாம்.

எப்படி கடவுள் நம்பிக்கைகளும், கோயில்களும் அதிகமாக, அந்த செயல்பாடுகளில் கயமைத்தனங்கள் புகுந்து, அதை எதிர்க்க நாத்திகவாதம் உருவாகி கடவுளே இல்லை என்று அறைகூவும் நிலைமை உருவானதோ அதை போல தான் இதுவும். சில பிரபலர் செய்யும் கயமைத்தனங்களை எதிர்க்க உருவான கூட்டம் வேறோரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவை எல்லாமும், 15 நிமிட பிரபலத்துக்குத் தான். யாரோ ஒருவர் ஸ்லாஷ் டாட்டில் சொன்னது போல, “The Internet used to be a university. Then it became a shopping mall. But now, it’s a war zone.”